ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காதிருக்க 06 மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களே இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.
இதன்படி, மேல், வட மத்திய, தெற்கு, ஊவா, மத்திய மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களின் முதலமைச்சர்களே இவ்வாறு ஆதரவளிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது வேறு யாராவதோ ஐ.தே.க.யின் அரசாங்கத்துடன் சேர்வதாக இருந்தால், அவர் கட்சியிலிருந்து விலகிச் செல்லட்டும் எனவும் இசுர தேவப்பிரிய மேலும் கூறியுள்ளார்.

