ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமையினால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் கூடியதன் பின்னர், அரசியலமைப்பின் பிரகாரம் பிரேரணையொன்று கொண்டுவந்து பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

