செப்டம்பர் 13ம் திகதி முதல் 25 வரையிலான காலத்தில் சில 3ஆம் நபர் ஆப்கள் மூலம் முகநூல் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகநூல் வாடிக்கையாளர்களின் அனுமதியுடன் அவர்களின் புகைப்படத்தை பயன்படுத்த பல 3ம் நபர் செயலிகளுக்கு முகநூல் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே 876 டெவலப்பர்களால் உருவாக்கப்பட்ட 1,500 ஆப்கள் கணினி கிருமிகளால் பாதிக்கப்பட்டதால் முகநூல் வாடிக்கையாளர்களின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
சுமார் 68 லட்சம் வாடிக்கையாளர்களின் புகைப்படங்கள் முகநூல் அனுமதி வழங்கி உள்ள 3ம் தரப்பு செயலிகள் மூலம் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. இந்த பிரச்சனை 12 நாட்களில் கண்டறியப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டது என்றும் முகநூல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த அக்டோபரில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா விவகாரத்தில் 3 கோடி வாடிக்கையாளாகளின் தனிப்பட்ட தகவல்கள் களவாடப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பிரச்சனையால் முகநூல் மீதான நம்பிக்கை தகர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் அந்நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது.

