சென்னையைச் சேர்ந்த தனியார் மொபைல் போன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய சாரதி(32 வயது) என்பவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் பிரசாந்தி (21 வயது) என்ற பெண்ணைத் திருமணம் முடித்துள்ளார். தற்போது பிரசாந்தி 4 மாத கர்ப்பிணி ஆக இருக்கின்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் சாரதியின் தாயார் இறந்துள்ளதாகவும் அதனால் சாரதி மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது. தாயார் மீது மிகுந்த பாசம் கொண்ட சாரதிக்கு யாரும் ஆறுதல் கூற முடியாத நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மன உழைச்சலாலேயே சாரதி மனைவியோடு தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் இருவரும் இணைந்து கடிதம் ஒன்றை எழுது வைத்துள்ளதாகவும் அதில் தமது தற்கொலை முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

