தமக்கு வேண்டாத ஒருவர் அதிகாரத்திற்கு வரக் கூடாது இருப்பதற்காகவே பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்ததாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் எவ்வித உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு, இராணுவ கட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகளை வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொண்டதாகவும், அந்தப் பிரச்சினைகள் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இருக்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

