Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிலவில் தன்னியக்க ரோபோ : சீனா வெற்றிகரமாக சோதனை

December 8, 2018
in News, Politics, World
0

நிலவில் தன்னியக்க ரோபோவை நிலைநிறுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலான தனது முதல் திட்டத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் செயற்படுத்தியுள்ளதாக சீன சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை பூமிக்கு தென்படாத நிலவின் மற்றொரு மூலையாக கருதப்படும் ‘வோன் கர்மான்’ என்னும் பகுதியில் சாங்’இ-4 என்னும் இந்த செயற்கைக்கோள் தரையிறங்கவுள்ளது.

சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் இந்த ரோபோ நிலவை நோக்கி செலுத்தப்பட்டது.

இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டுவந்து மேலதிக ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைகோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடு முரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் குறுங்கோள்களில் ஒன்று நிலவில் தெற்கு அரைக்கோளத்திலுள்ள ‘அய்ட்கன் பேசின்’ வலயத்தில் மோதியதால் அங்கு பெரும் பள்ளம் ஏற்பட்டது.

நிலவு குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே வோன் கர்மான் என்னும் இந்த இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தற்போது சீனாவினால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் சூழல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிப்பதோடு அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு எடுத்துவரவுள்ளது.

Tidal locking அல்லது ஓதப் பூட்டல் என்ற விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது.

ஏனெனில், பூமியை சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் அதே காலத்தை தன்னைத்தானே சுற்றி வருவதற்கும் நிலவு எடுத்துக்கொள்கிறது.

பொதுவாக நிலவின் ‘இருண்ட பக்கம்’ என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால்தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.

நிலவில் விதைப்பரிசோதனை

பூமியின் தொலைதூரத்தில் வானொலி அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த செயற்கைக்கோள் மேற்கொள்ளவுள்ளது.

அதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக உருளைக்கிழங்கு, அரபிடோப்சிஸ் ஆகியவற்றின் விதைகள் மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

“லூனார் மினி பயோஸ்பியர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணத்தை 28 சீன பல்கலைக்கழகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதிக்கு தெரியாமல் அமைச்சிலிருந்த பொலிஸார் இடமாற்றம் ?

Next Post

காஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர்

Next Post

காஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures