Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனவரி வரை புதிய பிரதமர் நியமனம் இல்லாமல் இருப்பது நாட்டுக்கு ஆபத்து- ஹர்ஷ

December 8, 2018
in News, Politics, World
0

செல்வாக்குள்ள புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னரே நிதிப் பயன்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தீர்மானிக்க முடியும் எனவும் பாராளுமன்றத்தில் எதிர்வரும் ஜனவரி முதல் நிதி அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னரே  நிதிப் பயன்பாடு குறித்து பாராளுமன்றத்தில் தீர்மானிக்க முடியும்.

மூன்றாவது வாரமாகவும்  விகாரமாதேவி பூங்காவில் தொடரும் சத்தியாக்கிரக  போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இருப்பினும், பொதுத்தேர்தலுக்கான நிதியினை ஜனாதிபதியால் ஒதுக்கீடு செய்யதுகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச துறைகளின் செயற்பாடுகள் அத்தனையும் ஜனவரி மாதம் முதல் ஸ்தம்பிதமடையும் நிலைமை காணப்படுவதாக கூறப்படுகின்றது. விரைவாக அரசாங்கமொன்று அமைக்கப்படுவதுதான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு என்பது சகலரினதும் கருத்தாகவுள்ளது.

இது இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி இந்த விடயத்தில் உடனடியாக தீர்மானம் எடுக்காமல், இழுத்தடித்து வருவதில் பல தரப்பிலும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

Previous Post

ஆச்சரியப்பட வைக்கும் அமலா பால்!

Next Post

ரணிலுடன் செல்லம் கொஞ்ச முடியாது

Next Post

ரணிலுடன் செல்லம் கொஞ்ச முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures