Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யேமன் முக்கிய சமாதான பேச்சுவார்த்தை ஸ்வீடனில் ஆரம்பம்!

December 7, 2018
in News, Politics, World
0

யேமனில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற உள்ளக போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலான சமாதானப் பேச்சுவார்த்தை, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஆரம்பமாகியுள்ளது.

இதுவொரு முக்கியமான திருப்புமுனை என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதுவர் மார்ட்டின் கிரிஃபித்திஸ், இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக, கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தாவதுடன், ஆயிரக்கணக்கான குடும்பங்களை மீண்டும் இணைய செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக் காலமாக உலகில் மிக மோசமான மனிதநேய நெருக்கடி உருவாகுவதற்கு யேமன் போர் முக்கிய காரணமாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மில்லியன் கணக்கானோர் பசி, பட்டினியால் துன்புற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இந்த அமர்வில் ஆயிரகணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ள செங்கடலில் உள்ள ஹுடைடா துறைமுக நகரில் ஏற்படும் முழுமையான போரை தடுக்கும் முக்கிய நோக்கம் உள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யேமனில் ஏற்படும் எதிர்கால அரசியல் தீர்வுக்கு பேச்சுவார்த்தை திட்டத்தை ஐக்கிய நாடுகள் அவை கொண்டுவரும் என்றும் நம்பப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்கும் முக்கிய தருணத்தை ஏற்படுத்திக் கொள்வோம் என்று ஸ்டாக்ஹோமில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய ஐநா தூதுவர் கிரிஃபித்திஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னர், ஹுடேடாவில் இருந்து கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கி, கட்டுப்பாட்டை அரசிடம் வழங்க வேண்டும் என்று டுவிட்டர் பதிவிட்டு யேமன் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, இந்த பேச்சுவார்த்தைகள் சானாவிலுள்ள விமானநிலையத்தை எல்லா பயணியர் விமான போக்குவரத்துக்கும் திறக்க வேண்டும், இல்லாவிட்டால், இந்த விமான நிலையத்திற்கு வருகின்ற ஐக்கிய நாடுகளின் விமானங்களை நிறுத்தப்போவதாக ஹூதி கிளர்ச்சியாளர்களின் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

போர் காரணமாக இந்த விமான நிலையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. ஹூதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சானாவையும், மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட அரசு நாட்டின் தெற்கில் அமைந்துள்ள ஏடன் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

Previous Post

அரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை!

Next Post

உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்!

Next Post

உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures