Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச தேரவாத பௌத்த மாநாடு கொழும்பில் ஆரம்பம்

November 28, 2018
in News, Politics, World
0

சர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கத்தின் ஐந்தாவது சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (27)  கொழும்பில் ஆரம்பமானது.

தேரவாத பௌத்த நாடுகளுக்கிடையில் சமய, கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், சர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தும் மாநாட்டிற்கான அனுசரணையை இம்முறை இலங்கை வழங்கியுள்ளது.

தேரவாத பௌத்த தத்துவம் எதிர்நோக்கும் சவால்களுக்கான வளமான தீர்வுகளை கண்டறிவதற்கு இம்மாநாடு மிகவும் முக்கியமானது என்பதுடன், நவீன உலகிற்கு பொருத்தமான வகையில் தேரவாத பௌத்த தத்துவத்தை சமூக மயப்படுத்துவதும் தேரவாத பௌத்த கல்வித்துறை ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதும் இதன் மற்றுமொரு நோக்கமாகும்.

தேரவாத பௌத்த தத்துவம் பரவியுள்ள 10 நாடுகளைச் சேர்ந்த மகா சங்கத்தினரும் நிபுணர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

இலங்கையில் பிரபாகரனுக்கு முக்கியத்துவமளித்த அரச ஊடகங்கள்; காட்டமான நாடாளுமன்ற உறுப்பினர்!

Next Post

நீதிக்காக ஜம்பர் அணியத் தயார் – சபாநாயகர்

Next Post

நீதிக்காக ஜம்பர் அணியத் தயார் – சபாநாயகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures