ஜே.வி.பி. யினரதும் சபாநாயகரதும் உள் நோக்கமாகம் பாராளுமன்றத்தில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையை தொடர்ந்தும் வைத்திருப்பதாகும் எனவும், இதனாலேயே இந்த இரு சாராரும் சர்வகட்சி மாநாட்டிக்கு செல்லவில்லை எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இந்த இரு தரப்பினரதும் சூழ்ச்சியின் பின்னணியின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டிய சர்வகட்சி மாநாட்டிற்கு மேற்படி இரு தரப்பும் சமுகமளிக்காமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

