பாராளுமன்றத்தில் தற்பொழுது அரசாங்க தரப்பு என்று ஒன்று இல்லையெனவும், இதனால், எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் விசேட சலுகைகள் காணப்படுவதில்லையெனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
பாராளுமன்றத்திலுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஹெலிகொப்டரைப் பயன்படுத்தவும் முடியாது. அதேபோன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு விசேட சலுகைகள் எதனையும் அனுபவிக்க முடியாது. அவர்கள் எல்லோரும் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தில் மாத்திரமே காணப்படுகின்றனர்.
அவ்வாறல்லாது, வேறு விசேட சலுகைகளை அனுபவிப்பது பொதுச் மக்களின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதாக அமையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

