உயர்நீதிமன்றம் தடை விதித்தப் பின்னர் கலைக்கப்பட்ட பாராளுமன்றை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானமானது, சட்டவிரோதமானதென அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரியட் அட்மிரல் சரத் வீரசேகரவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்டமா அதிபர், நாடாளுமன்றின் பொதுச்செயலாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

