சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்த 4 வயது சிறுவன நடுவானில் தாயின் மடியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த நான்கு வயதுடைய சிறுவன் தனது குடும்பத்தாருடன் புனித பயணமாக சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்குச் சென்றுள்ளார். பின்னர் குடும்பத்தாருடன் விமானத்தில் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளான்.
விமானம்புறப்பட்ட 45 நிமிடத்தில் சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. பின்னர் உடல்நிலை மோசமாக தாயின் மடியிலேயே உயிரிழந்தான். இதையடுத்து விமானமானது அவசர அவசரமாக அபுதாபியில் தரையிறக்கப்பட்டது. இதன் பின்னர் சிறுவனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதர் தெரிவித்தார்.

