யாழ்மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டது சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .
மூன்றாம் தவணைக்கான பரீட்சைகள் தற்போது இடம்பெறுகின்றபோதும் ,சீரற்ற காலைநிலையால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது .
யாழில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் 6 மணித்தியாலங்கள் தொடரலாம் என்று யாழ்ப்பாண வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் மேலும் அதிக மழைவிழ்ச்சி இடம்பெறலாமெனவும் அவர் கூறியதோடு. தொடர்ந்தும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

