Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வன்முறை தீவிரமடைந்ததால் பாகிஸ்தானை விட்டு வெளியேறும் ஆசியா

November 3, 2018
in News, Politics, World
0

பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீவி அந்நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசியாவின் விடுதலையை எதிர்த்து மதவாதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவரது குடும்பம் இம்முடிவை எடுத்தாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீவி(வயது 47). இவர் அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன்பு ஆசியா தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆசியா பீவிக்கு மரண தண்டனை விதித்தது.

தன்மீதான குற்றச்சாட்டு பொய் எனக் கூறி ஆசியா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆசியாவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை அழைத்துச் செல்வதற்காக பிரிட்டனில் இருந்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பாகிஸ்தான் வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆசியாவும், அவரது குடும்பத்தினரும் தற்போது பாகிஸ்தானில் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. அவர் எந்த நாட்டிற்கு செல்வார் என்ற தகவலும் வெளிப்படவில்லை. ஆனால், அவர் நாட்டைவிட்டுச் சென்றால் அவருக்கு கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளன.

இந்நிலைக்கு ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நீடிக்கிறது. மதவாத அமைப்புகளும், கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. மக்கள் பெருந்திரளாக கூடி போராட்டங்களில் ஈடுபட்டு, சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினர். டயர்களை கொளுத்தி போட்டனர். போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது. பஞ்சாப் மாகாணத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளி இறுதி வகுப்பு துணைத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. செல்போன் சேவை, இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தொடர்ந்து சிறுபான்மையினர்கள் தீவிர மதப்பற்றாளர்களால் பாதிக்கப்பட்டு வருவதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தால் தான் இது போன்ற பிரச்சனைகள் எழாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Previous Post

அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு

Next Post

குடிபோதையில் விமானம் ஓட்ட வந்த விமானி : லண்டனில் பரபரப்பு

Next Post

குடிபோதையில் விமானம் ஓட்ட வந்த விமானி : லண்டனில் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures