144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாபுஷ்கர விழா தொடக்கம்
மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநல்வேலி மாவட்டங்களில் பாயந்தோடும் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். மேலும் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகா புஷ்கர விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
நெல்லை மாவட்டங்களின் பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் மகா புஷ்கர விழா இன்று தொடங்கியுள்ளது. குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாவதை தொடர்ந்து, அந்த ராசிக்கு உகந்த தாமிரபரணி ஆற்றில்144 பின் மகா புஷ்கரம் விழா நடத்தப்படுகிறது. இதற்காக பாபநாசம் முதல் புன்னகாயல் வரையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் 64 தீர்த்த கட்டங்கள், `43 படித்துறைகள் மற்றும் ஆற்றங்கரையோர கோயில்களில்ஆகியவை மகா புஷ்கர விழாவுக்காக புதுப்பித்து கட்டப்பட்டு உள்ளன. பக்தர்கள் நீராடுவதற்காக, முறப்பநாடு, அகரம், நாணல்காடு, ஆழிக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அருகில், ஆழ்வார் திருநகரி திருசங் கனை, அகோப்பில்லா, காந்தீஸ்வ ரர், பட்சிராஜன், நாயக்கர் பகுதி, பிள்ளையார் கோவில், தோணித்துறை, பால்குளம், தென்திருப் பேரை, குரங்கனி, ஏரல் இரட்டை திருப்பதி, மங்கள குறிச்சி, சேர்மன் அருணாசலசுவாமி கோவில், வாழவல்லான், உமரிக்காடு, சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழங்கரை, முக்காணி ஆற்றுப்பாலம் மேற்கு மற்றும் கிழக்கில் 2 இடங்கள், சேர்ந்த பூமங் கலத்தில் 2 இடங்கள் என மொத்தம் 29 படித்துறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியளவிலிருந்து இந்த தீர்த்த தளங்களில் புனித நீராட பல்வேறு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு மகா புஷ்கர விழாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
வடநாட்டில் இருந்து ஏராளமான சாமியர்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட நெல்லை மாவட்டங்களுக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கியிருக்கும் ஆற்றங்கரையோர கோயில்கள் மற்றும் மண்டபங்களில் தங்கி தாமிரபரணி ஆற்றின் புனித நீராடி வருவகின்றனர். ஆக்டோபர் 22ம் தேதி நடைபெறும் மகா புஷ்கர விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாபநாசத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். மேலும், அங்கு நடைபெறும் துறவிகள் மாநாட்டில் விழா மலரை அவர் வெளியிடுகிறார்.
தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்காக 3 காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 16 போலீஸ் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் காவல்துறையில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறப்பு பயிற்சி பெற்ற 90 காவல்துறையினர் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினரும், 27 படகுகளும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.