Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

9 கோடி ரூபாய் மதிப்பிலான வன விலங்குகளின் பாகங்களை எரித்த மியான்மர் அதிகாரிகள்!

October 6, 2018
in News, Politics, World
0

மியான்மர் நாட்டில் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய பல்வேறு வன விலங்குகளின் பாகங்களை தீ வைத்து அழித்திருக்கிறார்கள் அதிகாரிகள். வன விலங்குகளைக் கொன்று அதன் பாகங்களை திருடுவது பல்வேறு உலக நாடுகளில் சட்டவிரோதமான செயலாகப் பார்க்கப்படுகிறது. அதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனையை அரசு கொடுத்தாலும் கூட கள்ளச்சந்தையில் கொடிகட்டிப் பறக்கிறது இந்த வியாபாரம். இதுபோன்று கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிக்கிக்கொண்டால் அவர்களிடமிருந்து வன விலங்குகளின் பாகங்களை அரசு கைப்பற்றி விடும்.இப்படிக் கைப்பற்றப்படும் பொருள்களை அரசும் விற்பனை செய்யவோ அப்படியே வைத்திருக்கவும் முடியாது. அப்படி வைத்திருந்தால் மீண்டும் கடத்தல்காரர்கள் அதைத் திருடுவதற்கு முயற்சி செய்வார்கள். எனவே, கடத்தல் பொருள்கள் அனைத்தையும் ஓரிடத்தில் குவித்து தீ வைத்து அழித்து விடுவது வழக்கம். இப்படி நேற்றுமுன்தினம் மியான்மரில் எரிக்கப்பட்ட பொருள்களில் 277 யானைத் தந்தங்கள், 1,544 மான் கொம்புகள், 45.5 கிலோ எறும்புத்தின்னி தோல் மற்றும் 180 புலிகளின் எலும்புகள் ஆகியவை இதில் அடக்கம். இவற்றின் மதிப்பு 1.3 மில்லியன் டாலர்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய்.

Previous Post

`கடல் நம்பமுடியாத அளவு கடினமாக இருந்தது!’ – 3 நாள் நடுக்கடலில் போராடிய டோமி உருக்கம்

Next Post

பிரான்ஸில் மாயமான இன்டர்போல் தலைவர்!

Next Post

பிரான்ஸில் மாயமான இன்டர்போல் தலைவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures