இந்தோனேஷியாவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.
மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் சுலவேசி என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டடங்கள் பல இடிந்து உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. 10 பேர் வரை இதனால் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.7 ஆக பதிவாகி இருக்கிறது. இதனால் தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
