Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலுடன் யானைகள் மோதி விபத்து

September 18, 2018
in News, Politics, World
0
எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலுடன் யானைகள் மோதி விபத்து

எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலுடன் யானைகள் மோதி விபத்திற்குள்ளானதில் ஐந்து யானைகள் உயிரிழந்ததுடன், ரயிலும் தடம்புரண்டுள்ளது.

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில், ஹபரனைக்கும் பலுகஸ்வெள ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த காட்டுப்பகுதி யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இருந்தபோதும் இன்று அதிகாலை 4 மணிக்கு யானைகள் தண்டவாளத்தில் கூட்டமாக இருந்துள்ள நிலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து உயிரிழந்த யானைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் வனவிலங்கு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதோடு, குறித்த விபத்தின் காரணமாக கொழும்புக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை தடம்புரண்ட புகையிரத பெட்டிகளை அகற்றும் பணிகள் மற்றும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

மீன் பிடிக்கச் சென்ற மீனவரைக் காணவில்லை – தலைமன்னார் பியரில் சம்பவம்

Next Post

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது

Next Post
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures