Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொழிற்சங்க நடவடிக்கையால் காட்டுயானைகளை விரட்டும் செயற்பாடு ஸ்தம்பிதம்

September 17, 2018
in News, Politics, World
0

அகில இலங்கை வனஜீவராசி கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, காட்டுயானைகளை விரட்டும் நடவடிக்கை உள்ளிட்ட பல செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதனால், காட்டுயானைகள் கிராமங்களுக்குள் சென்று மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை வனஜீவராசி கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் வி.பி.என். சதநுவன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், காட்டுயானைகள் தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளதுடன் 11 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வினவியபோது, எதிர்வரும் காலங்களில் இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

16 மாவட்டங்களில் வறட்சி, 715616 பேர் பாதிப்பு

Next Post

வட மாகாணத்தின் சில பகுதிகளில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள இ.போ.ச. ஊழியர்கள்

Next Post

வட மாகாணத்தின் சில பகுதிகளில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள இ.போ.ச. ஊழியர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures