அம்பாறை, நாவின்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் 152 ஆவது பொலில் தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் ஐ.பி. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமக்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரத்ததானம் வழங்கியிருந்தனர்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியிலிருந்து வருகதந்த வைத்தியர் காஞ்சனா தலைமையிலான குழுவினர் இந்த இரத்ததான முகாமை வழநடத்தினர்.
இந்நிகழ்வில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது

