Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நாவின் சிறப்பு நிபுணர் சிறிலங்கா வருகிறார்

August 30, 2018
in News, Politics, World
0

வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி அடுத்தவாம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், எதிர்வரும் செப்ரெம்பர் 3ஆம் நாள் கொழும்பு வரும் அவர், 11 ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருந்து நிலைமைகளை அவதானிப்பார்.

தமது பயணத்தின் நோக்கம், தகவல்களை சேகரித்து, மனித உரிமைகள் நிலைப்பாட்டிலிருந்து கடன் மற்றும் பிற நிதிய கடப்பாடு தொடர்பான கேள்விகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்று ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் அனைத்துலக சமூகம் உள்ளிட்ட அனைத்துப் பங்காளர்களுடனும் தான் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.

இந்தப் பயணத்தின் முடிவில், எதிர்வரும் செப்ரெம்பர் 11ஆம் நாள் காலை 11 மணிக்கு, கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் அவர் நடத்த திட்டமிட்டுள்ளார்.

இவர் தமது விரிவான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2019 மார்ச் மாதம் சமர்ப்பிப்பார்

Previous Post

வடக்கு-கிழக்கில் போராட்டங்கள்

Next Post

குழந்தைகளினுடை ஏழு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Next Post

குழந்தைகளினுடை ஏழு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures