Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பதுளையில் பஸ் விபத்து – 13 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு, 34 பேர் படுகாயம்

August 27, 2018
in News, Politics, World
0

கந்தேகெதர பகுதியிலிருந்து பதுளையை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பதுளை – கந்தேகெதர பிரதான வீதியில் அலுகொல்ல பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதோடு, 34 பேர் படு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தேகெதர பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பதுளை பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று காலை 8 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 34 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனம் ஒன்றிக்கு இடமளிக்கும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 34 பேர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

எல்லை நிர்ணய குழுவின் செலவு – ஒரு கோடிக்கு மேல்!

Next Post

இந்துசமுத்திர மாநாட்டில் பிரதமர் இன்று உரை

Next Post

இந்துசமுத்திர மாநாட்டில் பிரதமர் இன்று உரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures