ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் 22 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சரொருவர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.
அமைச்சர் ஒனோடெரா இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களை மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோருடன் ஜப்பான் இலங்கை பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், கொழும்புக்கு வெளியிலும் அவர் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ‘விரிவான பங்களிப்பு’ மேலும் வலுப்பெறுவதற்கு இந்த விஜயம் உறுதுணையாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜப்பானிய தூதரகம் மேலும் அறிவித்துள்ளது.
