Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது

August 15, 2018
in News, Politics, World
0

மட்டக்களப்பு, செங்கலடி – பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்ட விரோதமாக இரவு வேளையிலும் பகலிலும் ஆற்றுக்குள் உழவு இயந்திரங்களை செலுத்தி மணல் அகழ்வில் ஈடுபடுவதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் ஆற்றுப் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கண்காணிப்பில் ஈடுபட்ட விஷேட அதிரடிப்படையினர் மணல் அகழ்வில் ஈடுபட்டோரை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

புத்தம்புரி ஆற்றுக்குள் உழவு இயந்திரத்தை செலுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் அதன் சாரதிகளையும் புதன்கிழமை (15) அதிகாலை வேளை விஷேட அதிரடிப்படையினர் கைதுசெய்து கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துயள்ளனர்.

Previous Post

மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு காணி உறுதிபத்திரம் வழங்கப்படும்

Next Post

தனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து ஸ்தம்பிதம்

Next Post

தனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து ஸ்தம்பிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures