நாட்டின் காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையும் வேகமான காற்றும் காணப்படும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

