Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிமன்ற கோட்பாடுகளுக்கமைய அனைவரும் சுயாதீனமான முறையில் சேவையாற்ற வேண்டும்

August 11, 2018
in News, Politics, World
0

நீதிமன்றத்தில் சேவையாற்றும் அனைவரும் நீதிமன்ற கோட்பாடுகளுக்கமைய சுயாதீனமான முறையில் சேவையாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஊடாக இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டித்தொகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் மக்களின் நலன் கருதி தாமதப்படுத்தாமல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், வழக்குகள் சுயாதீனமான முறையில் நடாத்தப்பட வேண்டும்.

மேலும், நாட்டில் சகல நீதிமன்ற கட்டிடத்தொகுதிகளையும் அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும்“ பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தெரிவித்துள்ளார்.

Previous Post

சூரியனுக்குச் செல்லும் உலகின் முதல் செயற்கைக்கோள்! நாசா ரோக்ஸ்

Next Post

திருகோணமலையில் பல்வேறு திட்டங்கள்

Next Post

திருகோணமலையில் பல்வேறு திட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures