Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாரிய இழப்பு ஏற்பட்ட துயரத்தை மனதில் உணர்ந்தேன்- இரங்கல் செய்தியில் சம்பந்தன்

August 8, 2018
in News, Politics, World
0

தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான கலைஞர் முத்துவேல் கருணாநிதி மறைவு என்ற செய்தியை அறிந்து பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என்மனதில் உணர்ந்தேன் என இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

முது பெரும் தமிழறிஞர், உலகத் தமிழர்களின் உன்னத தலைவர், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் காலமானார் என்ற செய்தியை அறிந்து, பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என் மனதில் உணர்ந்தேன். கடுஞ்சுகயீனம் காரணமாக காவேரி மருத்துவ மனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த கடந்த சில நாட்களாக அவர் பற்றிய கரிசனையோடு நான் இருந்த அதேவேளை அவர் சுகம் அடைந்து உலகத் தமிழர்களுக்குத் தலைவனாகத் தொடர வேண்டுமென்ற பிரார்த்தனையே என் மனதில் இருந்தது. ஆயினும் காலம் அவர் உயிரைக் கவர்ந்து சென்று விட்டது. அவர் | இயற்கையெய்திவிட்டார்.

கடந்த ஆறு தசாப்தங்களாகத் தமிழ் நாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து அரசியல் பணியாற்றிய அவர் ஐந்து தடவைகள் தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும், தொடர்ச்சியாக 13 தடவைகள் தமிழ் நாட்டுச் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டியவராகவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழியில் கழகத்தின் அரசியல் பணியை ஆற்றியதோடு மட்டுமல்ல, செம்மொழியாகிய தமிழின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் சிறப்பான பணிகளைச் செய்தவராகவும், சிறந்த தமிழறிஞர், இலக்கிய அறிஞர், கதாசிரியர், நாடகாசிரியர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், உயர்வான தலைமைப் பண்புகள் கொண்டவர், அரசியல் ஞானி போன்ற பன்முக ஆளுமை | கொண்டவராக அவர் திகழ்ந்தார், இந்திய உப கண்டத்தின் அரசியலிலும் மிகவும் செல்வாக்குமிக்க தலைவராகவும், அவர் மதிக்கப்பட்டார். இத்தகைய உன்னத தலைவரின் சாதனைகளை இச்சிறிய அனுதாபச் செய்தியுள் அடக்கிவிட முடியாது.

கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் எனக்கும் மிக நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புகளும் உறவுகளும் இருந்து வந்தன. நான் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்திலும், அதன் பின்பும் அவர் எனக்குப் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் வழங்கியதோடு அவர் இறக்கும் வரை எமது அன்பான தொடர்புகளும் உரையாடல்களும் தொடர்ந்தன. தமிழ் தலைவர் தந்தை செல்வநாயகம், தலைவர் அமிர்தலிங்கம் உட்பட பல இலங்கைத் தமிழ் தலைவர்கள் தமிழ்நாட்டில் சீவித்த காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் அவரின் அன்பும், எமக்கான ஒத்துழைப்பும் அதிகமாக இருந்ததோடு, அரசியல் ரீதியிலும் எமக்கு பல்வேறு வகையில் உதவியாக இருந்தார். அவரின் பிரிவு என் மனதில் ஆழ்ந்த கவலையைத் தருவதாக உணர்கின்றேன்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளிலும் அவர் மிகுந்த ஈடுபாடு காட்டினார். கலவர காலங்களில் தமிழ் மக்கள் அடைந்த துயரங்கள், வேதனைகளில் தனது கரிசனையை காண்பித்து இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயற்பட்டார். அவரின் பிரிவால் இலங்கைத் தமிழ் மக்களும் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளனர் என்பதை தெரிவிப்பதோடு அம்மக்கள் சார்பிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும், எனது சார்பிலும் எனது ஆழ்ந்த கவலைகளையும் அனுதாபங்களையும் மறைந்த தலைவரின் குடும்ப உறவினர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் தெரிவிப்பதோடு உலகத் தமிழர்களின் உதய சூரியனாக இருந்து ஒளியூட்டிய அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Previous Post

சிங்கள பேரினவாத தேரருக்கு 19 வருட சிறைத்தண்டனை

Next Post

நீதிமன்றில் ஆஜராகுமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பாணை

Next Post
நீதிமன்றில் ஆஜராகுமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பாணை

நீதிமன்றில் ஆஜராகுமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பாணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures