Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

`நாட்டின் மூத்த தலைவரை இழந்துவிட்டோம்!’ – கருணாநிதி மறைவுக்குத் தலைவர்கள் இரங்கல்

August 8, 2018
in News, Politics, World
0

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி மறைவு

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 28-ம் தேதி திடீர் ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை 6:10 மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் கருணாநிதியின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.குடியரசுத்தலவைர் ராம்நாத் கோவிந்து தனது ட்விட்டரில் `திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி `இந்தியாவின் மிகச்சிற்ந்த தலைவர்களில் ஒருவர் தி.மு.க தலைவர் கருணாநிதி. அவரது மறைவை கேட்டு துயரமடைந்தேன். கருணாநிதியை இழந்து வாடும் தமிழகத்துக்கும், அவரது குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.தமிழ் மக்களால் நேசிக்கப்பட்டவர் கருணாநிதி, 6 தசாப்தங்களுக்கு மேலாக, தமிழக அரசியலில் கோலோச்சியவர். இந்தியா ஒரு பெரிய மகனை இழந்துள்ளது. இன்றைய தினம் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிறந்த தலைவனை இழந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜி :
கலைஞர் எம்.கருணாநிதி 60 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினர், 5 முறை முதல்வர் மற்றும் பல கூட்டணிகளின் தூணாக இருந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆர்வர்களிடம் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் ஆழ்ந்த தவறிவிட்டார்.
பரூக் அப்துல்லா :

“ஒரு பெரிய தலைவர் இறந்துவிட்டார், தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, இந்தியா முழுவதுமாக மட்டுமல்லாமல் அவர் கூட்டாட்சி மற்றும் தமிழ் மக்களுக்காகவும் போராடினார்.” தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ள புதைகுழியை மறுத்தால் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் , “என்றார் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அமித்ஷா :

`1975 ஆம் ஆண்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தப்பட்டபோது யாரும், கருணாநிதியின் போராட்டத்தை மறந்துவிட முடியாது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்’ என தெரிவித்துள்ளார்.

Previous Post

முட்டை, கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

Next Post

காமராஜர் நினைவிடம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயார்!

Next Post

காமராஜர் நினைவிடம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures