காட்டு யானை தாக்கிக் கொல்லப்பட்ட தந்தையின் உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவி ஒருவர்
நேற்று 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
தந்தையின் உடலுக்கு அருகில் சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு மாணவி பரீட்சை எழுத சென்ற சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
பாடசாலையின் அதிபர், வீட்டுக்கு வந்து மாணவியை அழைத்துச் சென்றுள்ளார்.அம்பாறை தமன பிரதேசத்தில், கடந்த 3ஆம் திகதி இரவு உந்துருளியில் சென்றுக்கொண்டிருந்த போது, சிறுமியின் தந்தை, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

