Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளை­ஞர் குழு அட்­ட­கா­சம்!!

August 6, 2018
in News, Politics, World
0

உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த இளை­ஞர் குழு­வின் அட்­ட­கா­சத்­தால் இடைக்­காடு மற்­றும் பத்­த­மே­னிப் பகுதி மக்­கள் அச்­சத்­தில் உறைந்­துள்­ள­னர். இடைக்­காடு கலை­ம­கள் சன­ச­மூக நிலை­யம், அத­னோடு இணைந்­துள்ள தாய் சேய் நிலை­யம், 4 வீடு­க­ளின் கேற்­கள் என்­ப­வற்­றின் மீது தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளார்­கள்.

இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் சனிக்­கி­ழமை இரவு 9 மணிக்­கும் 10 மணிக்­கும் இடை­யில் இடம்­பெற்­றுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இடைக்­காடு கலை­ம­கள் சன­ச­மூக நிலை­யம் மற்­றும் அதோடு இணைந்த நிலை­யில் உள்ள தாய் சேய் நிலைய யன்­னல்­க­ளின் கண்­ணா­டி­கள் அடித்து நொருக்­கப்­பட்­டுள்­ளது. 70 ஆயி­ரம் ரூபா வரை­யி­லான சேதம் ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.அச்­சு­வேலி – சந்­நிதி வீதி­யில் பத்­த­மே­னி­யில் உள்ள வலி.கிழக்­குப் பிர­தேச சபை உறுப்­பி­ன­ரும், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் பணி­யாள் தொகு­தி­யைச் சேர்ந்­த­வ­ரு­மான நா.இரா­சேந்­தி­ர­னின் வீட்டு முன்­பக்­கக் கேற்­றின் தக­ரங்­கள் கூரிய ஆயு­தத்­தால் வெட்­டப்­பட்­டும் தக­ரத்தை முறித்­தும் இளை­ஞர்­குழு சேதப்­ப­டுத்­தி­யுள்­ளது.

பத்­த­மே­னி­யில் தீத்­தாங்­கு­ளம் பிள்­ளை­யார் கோயில் பூச­க­ரின் வீட்­டுக் கேற்­றி­லும் தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. மேலும் இரண்டு வீடு­க­ளின் கேற்­றுக்­க­ளும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

அச்­சு­வேலி – சந்­நிதி வீதி­யில் உள்ள வெளி­நாட்­டில் வசிக்­கும் ஆசி­ரியை ஒரு­வ­ரின் வீட்­டுக் கேற் மீதும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

உந்­து­ரு­ளி­யில் திரிந்த இளை­ஞர்­க­ளின் விச­மச் செய­லால் பொது­மக்­கள் மத்­தி­யில் பதட்­டம் நில­வு­வதை அவ­தா­னிக்­கக் கூடி­ய­தாக உள்­ளது. பொது மக்­கள் பல­ரும் திகில் அடைந்த நிலை­யில் இருப்­ப­தா­கக் கூறி­னர்.

மேற்­படி சம்­ப­வங்­கள் தொடர்­பாக இடைக்­காடு கலை­ம­கள் சன­ச­மூக நிலைய நிர்­வா­கி­கள் மற்­றும் பாதிக்­கப்­பட்ட வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் தனித் தனி­யாக அச்­சு­வே­லிப் பொலி­ஸில் முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.

அச்­சு­வே­லிப் பொலி­ஸார் சந்­தே­க­ந­பர் ஒரு­வ­ரைக் கைது செய்­தி­ருப்­ப­தா­க­வும் விசா­ர­ணை­களை தொடர்ந்து முன்­னெ­டுத்­துள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Previous Post

கைதான வாள்­வெட்­டுக் கும்­ப­லு­டன் – பொலி­ஸூக்­கும் தொடர்பு?

Next Post

இளைஞர்களின் செயற்பாட்டால் -இராணுவம் நிலைகொள்கின்றது

Next Post

இளைஞர்களின் செயற்பாட்டால் -இராணுவம் நிலைகொள்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures