இந்தோனேசியாவின் லொம்போக் தீவில் சற்று நேரத்துக்கு முன்னர் 7 ரிச்ட்டர் அளவு பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த பூமியதிர்ச்சி நிலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதனால் இதனால், இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் இதே பிரதேசத்தில் இடம்பெற்ற 6.8 ரிச்ட்டர் பூமியதிர்ச்சியில் 17 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
