வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெங்குச் செய்கை விரிவுபடுத்தப்படும். அதேபோல், கால்நடை வளர்ப்பை விரிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.கிழக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படு;;த்துவது தனது நோக்கம் என்றும் பிரதமர் கூறினார். ஏறாவூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.
கிழக்கு மாகாணத்திற்கான பிரதான பொருளாதார அபிவிருத்திச் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுற்றுலாத்துறை மேலும் முன்னேற்றம் காணும் என்றும் பிதைமர் குறிப்பிட்டார்.
‘கம்பெரலிய’ திட்டத்தின் ஊடாக கிராமப்புறங்களை முன்னேற்றும் அதேவேளை, ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் மூலம் தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் வழங்கப்படும். அதேபோல் ஐஸ் களஞ்சியமொன்றும் அமைக்கப்படும். மீனவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெங்குச் செய்கை விரிவுபடுத்தப்படும். அதேபோல், கால்நடை வளர்ப்பை விரிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
