திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 58 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சித்தக்குடிப்பட்டியில் மண்டிக்கடை உரிமையாளர் ஜெயசந்திரன் என்பவர் வெளியூர் சென்று வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த 58 சவரன் நகையும், ரூ.82,000 பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
