Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடு அபி­வி­ருத்தி அடை­யும்­ போது – ராணு­வத்­தின் தேவை வீழ்ச்­சியடையும்

July 23, 2018
in News, Politics, World
0
நாடு அபி­வி­ருத்தி அடை­யும்­ போது – ராணு­வத்­தின் தேவை வீழ்ச்­சியடையும்

ஒரு நாடு அபி­வி­ருத்தி அடைய அடைய இரா­ணு­வத்­தின் தேவை­யும் வீழ்ச்­சி­ய­டை­யும். அதை நாங்­கள் மூடி மறைத்­துச் செய்­யப் போவ­தில்லை. வெளிப்­ப­டை­யா­கக் கூறியே செய்­வோம். தெற்­கில் சில­ருக்கு பிர­பா­க­ர­னுக்கு உயி­ரூட்­ட ­வேண்டிய தேவை இருக்­கின்­றது. இன­வா­தத்­துக்­கும் அவர்­கள் உயி­ரூட்­டு­ கின்­ற­னர்.

இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.
வடக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளில் கட­மை­யாற்­றும் தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கும் நிகழ்வு நேற்று யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யில் நடை­பெற்­றது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்டு நிய­ம­னம் வழங்­கும் நிகழ்வை ஆரம்­பித்து வைத்­தார். இந்த நிகழ்­வில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரிக்கு வர வாய்ப்­புக் கிடைத்­த­மைக்கு பெரி­தும் மகிழ்ச்­சி­ய­டை­கின்­றேன். ஆறு­மு­கம் நாவ­ல­ரின் செயற்­பாடே இவற்­றுக்கு முன்­னு­தா­ர­ணம். அவ­ரின் காலத்­துக்­குப் பின்­னரே இந்­துக் கல்­லூ­ரி­கள் வளர்ச்­சி­ய­டைந்­தன. இந்­துக் கல்­லூ­ரி­க­ளைப் பின்­பற்­றியே தென்­ப­கு­தி­க­ளில் செயற்­பா­டு­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இவை அத்­த­னை­யும் ஒரு தொடர்­பு­பட்ட விட­ய­மா­கும். போரின் பின்­ன­ரான காலத்­தில் பாட­சா­லை­க­ளில் ஆசி­ரி­யர்­கள் பற்­றாக்­குறை இருந்­தது. நாம் அறி­வித்­தி­ருந்த தகு­தி­கள் உடை­ய­வர்­கள் இருக்­க­வில்லை. தற்­போது தகு­தி­யான அனை­வ­ரை­யும் உள்­வாங்­கும் முக­மாக நாங்­கள் இந்­தச் செயற்­பாட்டை முன்­னெ­டுத்­துள்­ளோம்.

680 தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்கு நாங்­கள் நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­கி­யுள்­ளோம். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராசா ஒவ்­வொரு கிழ­மை­யும் இனி இது தொடர்­பில் எனக்கு நினை­வூட்­ட­மாட்­டார் என்று நினைக்­கின்­றேன்.

கல்­வி­யின் சீர­ழிவு

போருக்கு முன்­னர் சிறந்த ஆசி­ரி­யர்­கள் யாழ்ப்­பா­ணத்­தில்­தான் இருந்­தார்­கள். போரால் அனைத்­தும் சீர­ழிந்து போய்­விட்­டது. அதை நாங்­கள் மீண்­டும் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டும். அதற்­குப் பயிற்சி பெற்ற ஆசி­ரி­யர்­கள் தேவை. ஆசி­ரி­யர்­க­ளுக்­கான பயிற்­சி­களை வழங்க கல்வி அமைச்­சர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம் நட­வ­டிக்கை எடுப்­பார். ஓய்வு பெற்று வெளி­நா­டு­க­ளில் உள்­ள­வர்­க­ளைக் கொண்­டு­வந்து இவ்­வா­றான பயிற்­சி­களை வழங்க முடி­யும் என்று நாங்­கள் நம்­பு­கின்­றோம்.

நாம் பாட­சா­லை­யில் கற்­ற­போது போட்டி இருந்­தது. க.பொ.த உயர்­த­ரம், க.பொ.த சாத­ரண தரப் பெறு­பே­று­கள் வெளி­யா­கும்­போது யாழ்ப்­பா­ணப் பாட­சா­லையா? அல்­லது எமது பாட­சா­லையா (கொழும்பு) சிறந்த பெறு­பே­று­க­ளைப் பெறும் என்ற போட்­டித் தன்மை இருந்­தது. ஒக்ஸ்­வேர்ட் பல்­க­லைக் கழ­கத்­துக்­கும் யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து தேர்ச்சி பெற்­றி­ருந்­த­னர். அவர்­க­ளின் அதி­க­மா­ன­வர்­கள் ஹாட்­லிக் கல்­லூரி மாண­வர்­கள். அதில் குறிப்­பித்­தக்­க­வர் சுந்­த­ர­லிங்­கம்.

சிறந்த கல்­விச்­சேவை

அதே­போன்ற சிறந்த கல்­விச் சேவையை நாம் வழங்க வேண்­டும். சிறந்த ஆசி­ரி­யர்­கள் இருக்­கும் பட்­சத்­தில் நாம் அப்­ப­டி­யான கல்வி வளத்­தைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும். இது போன்ற மேல­தி­க­மான ஆசி­ரி­யர்­க­ளை­யும் சேர்த்­துக் கொள்­ளப் போகின்­றோம். விளை­யாட்­டுத் துறை, நட­னத்­துறை என்­ப­வற்­றை­யும் மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம். நாங்­கள் பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளை­யும் அண்­மை­யில் உள்­வாங்­கி­யுள்­ளோம். நாம் முடிந்த அளவு ஏனைய மாகா­ணங்­க­ளுக்­கும் தமிழ் மொழி ஆசி­ரி­யர்­களை இணைத்­துக் கொள்ள முயற்­சிக்­கின்­றோம்.

குழப்­பக்­கூ­டாது

நாம் ஒன்­றித்து இருக்க வேண்­டும். அனை­வ­ரும் ஒன்­றித்­துப் பய­ணிக்க வேண்­டும். அதைக் குழப்­பும் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டக் கூடாது. யாழ்ப்­பா­ணப் படை­யி­னர் தொடர்­பில் சில சீர் திருத்­தங்­கள் நடை­பெ­று­கின்­றன. அது எந்த இரா­ணு­வத்­தி­லும் நடை­பெ­றக் கூடிய ஒன்று. அதன்­போது சில கட்­ட­ளைத் தள­ப­தி­க­ளுக்கு நிர்­வா­கக் கட­மை­கள் வழங்­கப்­ப­டும்.

இது இலங்­கை­யில் ஒரு பகுதி. நாங்­கள் ஒன்று சேரும்­போது இவை இயல்­பா­கவே நடை­பெ­றும். இங்கு பயங்­க­ர­வா­தம் இருந்­தது. தென்­ப­கு­தி­யி­லும் இருந்­தது. படிப்­ப­டி­யா­கப் பயங்­க­ர­வா­தம் இல்­லா­து­போ­கும்­போது படைச்­சீ­ராக்க நில­மை­கள் இயல்­பா­கவே நடை­பெ­றும் – என்­றார்.

நிகழ்வு

தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கும் நிகழ்­வில் கல்வி அமைச்­சர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம், அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, பிரதி இரா­ஜாங்க அமைச்­சர் காதர் மஸ்­தான், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சோ.சோனா­தி­ராஜா, ஈ.சர­வ­ண­ப­வன், எம்.ஏ.சுமந்­தி­ரன், திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரு­டன் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள், திணைக்­கள அதி­கா­ரி­கள் எனப் பலர் கலந்து கொண்­ட­னர்.

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி மாண­வர்­க­ளின் வாத்­திய இசை­யு­டன் நிகழ்­வில் விருந்­தி­னர்­கள் அழைத்து வரப்­பட்­ட­னர். யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூரி மாண­வி­க­ளின் வர­வேற்பு நட­னத்­து­டன் நிகழ்வு ஆரம்­ப­மா­னது.

தொண்­டர் ஆசி­ரி­யர்­கள் 457 பேருக்கு நேற்று நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன. 676 தொண்­டர் ஆசி­ரி­யர்­கள் நிய­ம­னத்­துக்­கா­கத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். அவர்­க­ளில் 176 பேருக்கு கொழும்­பில் ஏற்­க­னவே நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. மிகுதி 494 பேரில் தகை­மை­களை நிறைவு செய்­த­வர்­க­ளுக்கே நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன.

தெரிவு செய்­யப்­பட்ட 5 பேருக்கு நிய­ம­னங்­களை வழங்கி தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிய­ம­னம் வழங்­கலை ஆரம்­பித்து வைத்­தார். தொடர்ந்து கல்வி அமைச்­சர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம், வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், பிரதி அமைச்­சர் காதர் மஸ்­தான், வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் சர்­வேஸ்­வ­ரன் ஆகி­யோர் வழங்­கி­னர்.

யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கம்

கடன்­க­ளால் பாதிக்­கப்­பட்ட பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கும் நிகழ்வு யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நடை­பெற்­றது. நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர கலந்து கொண்­டி­ருந்­தார். கடன்­க­ளால் பெண்­கள் பாதிப்­புக்கு உள்­ளா­கின்­ற­னர் என்று குறிப்­பிட்ட அவர், நுண்­க­டன் வழங்­கும் நிதி நிறு­வ­னங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த சட்­ட­வ­ரைவு கொண்டு வரப்­ப­ட­வுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.

இங்கு உரை­யாற்­றிய தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வறட்­சி­யால் மக்­கள் பாதிக்­கப்­பட்­ட­னர். தனி­யா­ரி­டம் கூடிய வட்­டிக்கு கடன் பெற்­ற­னர். அதனை மீளச் செலுத்த முடி­யா­மல் திண­றி­னர். இந்த மக்­களை மீட்­ப­தற்­கா­கவே, இந்த நிதி உதவி வழங்­கும் திட்­டத்­தைச் செயற்­ப­டுத்­து­கின்­றோம். இதற்­காக 20 ஆயி­ரம் மில்­லி­யன் வரை­யில் தேவைப்­ப­ட­லாம் என்று கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வடக்கு கிழக்கு அபி­வி­ருத்தி

வட கிழக்­கில் பெரிய அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­கி­றோம். உல்­லாச பய­ணத்­து­றையை அதி­க­ரிக்­கின்­றோம். அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளில் ஒரு பகு­தி­யினை பெண்­த­லை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளுக்கு வழங்க இருக்­கின்­றோம். மேலும் போரால் பாதிக்­கப்­பட்ட வீடு­களை மறு­சீ­ர­மைக்க பல்­வேறு தரப்­புக்­க­ளு­டன் பேசி­யி­ருக்­கின்­றோம்.

போரி­னால் யாழ்ப்­பா­ணம் மட்­டு­மல்ல இலங்­கை­யும் அழிந்­தது. ஜூலை கல­வ­ரம் மக்­க­ளி­டத்­தில் தாக்­கம் ஏற்­ப­டுத்­தி­யது. விடு­த­லைப் புலி­கள் போரா­டி­னார்­கள். கொழும்­புக்கு அடுத்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் இருந்­தது. தற்­போது அந்த நிலை இல்லை. எமக்­குப் பின்­னர் வளர்ச்­சி­ய­டைய ஆரம்­பித்த நாடு­கள் இன்று எம்­மைத் தாண்­டிச் சென்­று­விட்­டார்­கள் – என்­றார்.

Previous Post

கையடக்கத் தொலைபேசிகளை இனங்காணுவதற்கு விசேட உபகரணம்

Next Post

ஆசி­ரி­யர் யார்? மாண­வர் யார்? என்று ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது : வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்

Next Post
ஆசி­ரி­யர் யார்? மாண­வர் யார்? என்று ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது : வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்

ஆசி­ரி­யர் யார்? மாண­வர் யார்? என்று ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது : வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures