Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரிட்டன் மகாராணியை காக்க வைத்த டிரம்ப்

July 14, 2018
in News, Politics, World
0

இங்கிலாந்து நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டு மகாராணி எலிசபெத்தை வெயிலில் 10 நிமிடங்கள் காக்க வைத்ததாகவும், உரிய மரியாதையை அளிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாமதம்:
பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை, உலக நாட்டு தலைவர்கள் சந்திக்கும்போது, மரியாதை சார்ந்த சில சம்பிரதாய நடத்தைகள் உள்ளன. இதை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 4 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றார். நேற்று அரண்மனைக்கு சென்று மகாராணி எலிசபெத்தை சந்தித்தார். அப்போது குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல், 10 நிமிடம் தாமதமாக டிரம்ப் வந்தார்.
பிரிட்டனில் தற்போது வெயில் காலம். இதனால் மகாராணி, அங்கிருந்த சிறு தடுப்பின் நிழலில் 10 நிமிடம் காத்திருந்து டிரம்பை வரவேற்றார். அணிவகுப்பு மரியாதையின் போது, மகாராணிக்கு இணையாக நடக்காமல், 2 அடிக்கு முன்னால் நடந்தார்.
மகாராணி முன் தலை குனியாமல், கைகுலுக்கினார் டிரம்ப். இவையெல்லாம் பிரிட்டனில் பரபரப்பாக பேசப்படுகின்றன.

Previous Post

வீதிகளில் நிரம்பி வழியும் வாகனங்கள்! – சிவப்பு எச்சரிக்கை!

Next Post

வங்கதேசத்தில் உலகின் மிகப்பெரிய விசா மையம் திறப்பு

Next Post

வங்கதேசத்தில் உலகின் மிகப்பெரிய விசா மையம் திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures