Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊழலும் மோசடியும் ஒழிக்கப்படாதவரை நாட்டின் தலைவிதி மாறாது

July 6, 2018
in News, Politics, World
0

ஊழல் மற்­றும் மோச­டி­கள் இந்த நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­யங்­க­ளா­கவே மாறி­விட்­டன. ஏனென்­றால் ஊழல் மோச­டி­கள் சிறி­ய­வையோ அல்­லது பெரி­ய­வையோ அவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அரசு அக்­கறை காட்­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை.

முன்­னாள் அரச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்­ச­வின் தேர்­தல் செல­வு­க­ளுக்கு சீன நிறு­வ­னம் ஒன்று பெருந்­தொ­கை­யான பணத்தை வழங்­கி­ய­தாக அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வெளி­யா­கும் நியூ­யோர்க் ரைம்ஸ் பத்­தி­ரிகை செய்தி வௌியிட்­டுள்­ளது. இதில் உண்மை இருப்­ப­தற்­கான சாத்­தி­யக் கூறு அதி­க­மா­கவே உள்­ளது.

மகிந்த சீனா­வு­டன் நெருங்­கிய தொடர்பு பேணிச் செயற்­பட்ட ஒரு­வர். மகிந்த சீனா­வுக்கு மிக­வும் நெருங்­கிய ஒரு­வ­ரா­கவே எப்­போ­தும் இருந்­துள்­ளார். சீனா­வின் தலை­யீடு இலங்­கை­யில் அதி­க­ரித்­துச் செல்­வ­தற்­கும் அவரே கார­ண­மாக இருந்­துள்­ளார்.இவ­ரது காலத்­தி­லேயே சீனா மிக அதிக அள­வி­லான கடன்­களை இலங்­கைக்கு வழங்­கி­யது. அந்­தக் கடன்­கள் வட்­டி­யும்,முத­லு­மா­கச் சேர்ந்து இலங்­கை­யின் குடி மக்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­ன­தும் தலை­க­ளில் சுமை­யாக நெரித்­து­வ­ரு­கின்­றன.

நாட்டு மக்­கள் பொரு­ளா­தார ரீதி­யான துன்­பங்­களை எதிர்­கொள்­வ­தற்கு இந்­தக் கடன்­களே மூல­கா­ர­ண­மா­க­வும் உள்­ளன. இதை­விட, அம்­பாந்­தோட்டை துறை­முக நிர்­வா­கம் சீனா­வின் வசம் சென்­ற­தற்­கும், கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்­திப் பணி­க­ளில் சீனா ஈடு­பட்டு வரு­வ­தற்­கும் மகிந்­தவே வழி­வ­குத்­தார்.

அதை­விட நாட்­டின் கட்­டு­மா­னப் பணி­க­ளில் 70வீத­மா­னவை சீன நாட்­டின் பொறுப்­பில் உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கின்­றது.தற்­போது 40ஆயி­ரம் வீடு­களை அமைக்­கும் பணி­யி­லும் சீனாவே ஈடு­ப­ட­வுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கின்­றது. இத­னால் மகிந்த பத­வி­யில் தொட­ரு­வதை சீனா விரும்­பி­ய­தில் ஆச்­ச­ரி­யம் எது­வு­மில்லை.

மகிந்­த­வின் தேர்­தல் பரப்­புக்­காக சீனா
பெருந்­தொகை நிதியை
வழங்­கி­ய­தா­கக் குற்­றச்­சாட்டு

இந்த நிலை­யில் 2015ஆம் ஆண்டு இடம்­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லின்­போது சீன நிறு­வ­னம் ஒன்று தேர்­தல் பரப்­பு­ரைச் செல­வு­க­ளுக்­க­ளாக 7.5 மில்­லி­யன் அெம­ரிக்க டொலர்­களை மகிந்­த­வுக்கு வழங்­கி­ய­தாக வௌியான செய்­தி­யில் உண்­மைத் தன்மை உள்­ளதை நம்­பக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.
இது உண­மை­யாக இருக்­கு­மா­னால், இதை­விட மிகப்­பெ­ரிய மோசடி எது­வும் இந்த நாட்­டில் இதற்கு முன்­னர் இடம்­பெற்­றி­ருக்க முடி­யாது.

இது தொடர்­பாக உட­ன­டி­யா­கவே விசா­ர­ணை­களை ஆரம்­பி்த்து அதன் உண்­மைத் தன்­மை­யைக் கண்­ட­றி­வ­தும், குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தும் அர­சின் தலை­யாய கட­மை­யா­கும். ஆனால் ஏற்­க­னவே நடந்த ஊழல் மோச­டி­கள் மற்­றும் குற்­றச் செயல்­கள் தொடர்­பாக நட­வ­டிக்கை எடுப்­ப­தில் பின் நிற்­கும் இலங்கை அரசு இந்த விட­யத்­தில் பொறுப்­பு­டன் செயற்­ப­டுமா என்­பது சந்­தே­கத்­துக்­கி­ட­மா­னது.

இலங்கை மின்­சா­ர­சபை கடந்த ஆண்டு நான்­கா­யி­ரத்­துக்­கும் அதி­க­மான கோடி ரூபாய்­களை நட்­ட­மா­கப் பதி­வு­செய்­துள்­ளது. கடந்த ஆண்­டுக்கு முந்­திய ஆண்­டை­விட சுமார் மூவா­யி­ரம் கோடி­யி­னால் இந்­தத்­தொகை உயர்­வ­டைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. மின்­சார சபை­யைப்­போன்­று­தான் ஏனைய அரச நிறு­வ­னங்­க­ளும் பெரு­ம­ளவு நட்­டத்­தைப் பதி­வு­செய்­துள்­ளன. இந்த நிலை­யில் நாட்­டில் பொரு­ளா­தா­ர­முன்­னேற்­றம் ஏற்­ப­டு­மென எவ்­வாறு எதிர் பார்க்க முடி­யும்?நாட்டு மக்­க­ளின் வறுமை நிலை தொடர்­க­தை­யா­வது நாட்­டு­மக்­க­ளுக்கு கவ­லை­யும் சிர­ம­மும் தரு­வ­தாக அமை­யும்

மக்­க­ளால் தெரி­வு­செய்­யப்­ப­டும் அரசு
மக்­க­ளுக்­கான தனது கட­மையை
நிறை­வேற்ற வேண்­டி­யது அவ­சி­யம்

மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட அரசு ஒன்­றுக்கு முக்­கி­ய­மான பொறுப்­புக்­கள் சில உள்­ளன. அதில் ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தும், மக்­க­ளின்­பொ­ரு­ளா­தார நலன்­க­ளைப் பேணு­வ­தும் பிர­தானமானவை.ஆனால் இந்த நாட்­டில் இவை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தா­கவே தெரி­ய­வில்லை. ஊழல் வாதி­க­ளும் மோச­டி­யா­ளர்­க­ளும், வேறு­குற்­ற­வா­ளி­க­ளும் சுதந்­தி­ர­மாக உல­வு­கின்ற நிலை­யில், நாட்­டின் பாமர மக்­கள் வறு­மை­யில் வாடு­வ­தையே இங்கு காண முடி­கின்­றது.

அர­சி­யல்­வா­தி­கள் எதைச் செய்­தா­லும் அதை மறுப்­பின்றி ஏற்­க­வேண்­டிய பரி­தா­ப­நி­லை­யில் நாட்டு மக்­கள் உள்­ள­தைக் காண முடி­கின்­றது. தேர்­தல் வேளை­க­ளில் மட்­டுமே மக்­கள் முன்­பாக வந்து வாக்­குப் பிச்சை கேட்­ப­வர்­கள், அதன்­பின்­னர் அவர்­களை மறந்து விடு­கி­றார்­கள்.

நேர்­மை­யும் துணி­வும்­கொண்ட
அர­சி­யல் தலை­வ­ரொ­ரு­வர்
இந்த நாட்­டின் ஆட்­சிப்­பொ­றுப்பை
ஏற்க வேண்­டும்

நேர்­மை­யும் துணி­வும்­கொண்ட ஒரு­வர் ஆட்­சிப்­பொ­றுப்பை ஏற்­கும்­போ­து­தான், இந்த நாட்­டைப் பீடித்­துள்ள சிர­மங்­கள் அற்­றுப் போவ­தற்கு வழி­பி­றக்­கும். ஆனால் அத்­த­கைய ஒரு­வரை இது­வரை இந்த நாட்டு மக்­கள் இனம்­கண்­டு­கொள்ள இய­லா­துள்­ள­னர்.

பொரு­ளா­தா­ரப்­பி­ரச்­சி­னை­யும் இனப்­பி­ரச்­சி­னை­யும் தீராத தலை­வ­லி­யாக உரு­வெ­டுத்­துக் காணப்­ப­டு­கின்­றன. இனப்­பி­ரச்­சி­னை­கா­ர­ண­மாக நாடு­பெ­ரும் அழி­வு­க­ளைச் சந்­தித்து விட்­டது. ஆனா­லும் அதற்­குத் தீர்­வைக் காண்­ப­தற்­கான எந்­த­வொரு ஏற்­பா­டும் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. இன­வா­தி­க­ளும் சுய­ந­ல­வா­தி­க­ளும் அர­சி­ய­லில் ஆதிக்­கம் செலுத்­து­வ­தால் இந்த நிலை ஏற்­பட்­டுள்­ளது.

என்­ன­தான் இருந்­த­போ­தி­லும், ஊழ­லுக்­கும் மோச­டிக்­கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுத்து அவற்­று­டன்­தொ­டர்­புடை யவர்­க­ளுக்­குத் தண்­டனை வழங்­காத வரை­யில் இந்த நாட்­டின் தலை­விதி மாறவே மாட்­டாது.

Previous Post

வளர்மதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Next Post

மீண்டும் பழைய விலைக்கே எரிபொருள் விற்பனை

Next Post
மீண்டும் பழைய விலைக்கே எரிபொருள் விற்பனை

மீண்டும் பழைய விலைக்கே எரிபொருள் விற்பனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures