Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஜயகலாவை கைதுசெய்யக் கோரி மூன்று முறைப்பாடுகள்

July 4, 2018
in News, Politics, World
0
விஜயகலாவை கைதுசெய்யக் கோரி  மூன்று முறைப்பாடுகள்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் அலு­வ­ல­கத்தில் இம் மூன்று முறைப்­பா­டு­களும் நேற்று பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் பொலிஸ் மா அதிபர் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யினை எடுப்பார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வண்ணம் சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் நடந்­து­கொண்­டுள்­ளதால் அவரை உடன் கைது செய்­யு­மாறு சிங்­ஹல ராவய அமைப்பு முறைப்­பாடு ஊடாக பொலிஸ் மா அதி­பரைக் கோரி­யுள்­ளது.

அத்துடன் பிவித்துரு ஹெலஉறுமய சார்பிலும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர­சி­ய­ல­மைப்பை மீறும், பயங்­க­ர­வாத தடைச் சட்டம், தண்­டனை சட்டக் கோவை, சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் தண்­டனைக்குரிய குற்­றத்தை இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் புரிந்­துள்­ள­தாக கூறி அவரை உடன் கைது செய்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி உண்­மையை கண்­ட­றியும் அமைப்பு பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறைப்­பா­ட­ளித்­துள்­ளது.

நேற்று காலை கோட்­டையில் உள்ள பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு சென்ற சிங்­ஹல ராவய அமைப்பின் தேசிய அமைப்­பாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர் உள்­ளிட்ட தேரர்கள், பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­ல­கத்தில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக முறைப்­பா­ட­ளித்­தனர்.

மூன்று நாட்­க­ளுக்குள் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றினால், அடுத்­த­கட்­ட­மாக தாம் நீதி­மன்றை நாட­வுள்­ள­தாக முறைப்­பா­ட­ளித்த பின்னர் மாகல்­கந்தே சுதத்த தேரர் கூறினார்.

இதே­வேளை சட்­டத்­த­ர­ணி­களை உள்­ள­டக்­கிய உண்­மையை கண்­ட­றியும் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சீ தொல­வத்த தலை­மையில் பொலிஸ் தலை­மை­யகம் சென்ற சட்­டத்­த­ர­ணிகள் குழுவும் நேற்று பொலிஸ் மா அதி­ப­ருக்கு விஜ­ய­கலா மகேஸ்­வரன் தொடர்பில் முறைப்­பாடு செய்­தது.

அத்த முறைப்­பாட்டில் , இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­படை அம்­சத்தை மீறி­யுள்­ள­தா­கவும் நாட்டின் ஒரு­மைப்­பாட்டை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளி­யிட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழும் , தண்­டனை சட்டக் கோவையின் 114, 115 ஆம் அத்­தி­யாயங்­களின் கீழும் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தண்­ட­னைக்­கு­ரிய குற்­றத்தை புரிந்­துள்ளார். அவரின் கூற்­றா­னது 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் பிர­கா­ரமும் இனங்­க­ளுக்கிடையே விரி­சலை ஏற்­ப­டுத்தும் தண்­டனைக்குரிய குற்­ற­மாகும் என்று சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் சாதாரண ஒருவர் இக்குற்றங்களை செய்தால் பொலிஸார் எவ்வாறான கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களோ அதனை விஜயகலா மகேஸ்வரனின் விடயத்திலும் நடை முறைப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.

Previous Post

விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் கோரிக்கை

Next Post

11 பேரை கொன்ற சாமியார் : தீவிரமாக தேடப்படுகிறார்

Next Post
11 பேரை கொன்ற சாமியார் : தீவிரமாக தேடப்படுகிறார்

11 பேரை கொன்ற சாமியார் : தீவிரமாக தேடப்படுகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures