ஆப்கானிஸ்தான் கிழக்கு பகுதி நன்கர்ஹர் மாகாணத்தின் ஜலாலாபாத்தில் அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி கலந்துகொண்டார்.நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்டு சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் இந்துக்கள், சீக்கியர்கள் என 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.












