யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்திலும் எமது இனம் பாதிக்கப்பட்டது. போரில்லாத காலத் திலும் எமது இனம் திட்டமிட்டு பாதிக்கச் செய்யப்படுகின்றது. இதற்கு நாம் தான் முடிவு கட்டவேண் டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் காட்டமாகத் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 60வயதுப் பெண் ஒருவர் கொள்ளையர்களால் மிகக் கொடூரமாக வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டிலிருந்து நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் தொடரும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கல்வி கலாசார பண்பாடுகளுக்கு யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் பெயர்போயிருந்தது. ஆனால் இன்று தலைகீழாக நிலமை மாறிப்போய் விட்டது. வாள்வெட்டுக்குழுக்களின் அட்டகாசம் ஒருபுறம். போதைப் பொருள் பாவனையின் உச்சம் மறுபுறம். கொள்ளையர்களின் அட்டூழியங்கள் இன்னொருபுறம். காமுகர்களின் கொலைவெறித்தனங்கள் மற்றொருபுறம் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு யாழ்ப்பாணத்தின் நிலமை வந்துள்ளது. இது திட்டமிட்டு கொண்டுவரப்பட்டது. இது யாவரும் அறிந்த உண்மை.
