Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறையிலிருக்கும் பிள்ளையானை விடுதலை செய்யுமாறு உண்ணாவிரதம்

June 26, 2018
in News, Politics, World
0
சிறையிலிருக்கும் பிள்ளையானை விடுதலை செய்யுமாறு உண்ணாவிரதம்

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான பயங்;கரவாத தடைச் சட்டத்தை நீக்கி சுயமாக ஜனநாயகப் பாதையில் ஈடுபட வழிவிடுமாறு கோரி அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று (25) திங்கட்கிழமை அடையாள உண்ணாவிதரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரின் ஏற்பாட்டியில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்ற உண்ணாவிரப் போரட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன், உப தலைவர் நா. திரவியம், கட்சியிருந்து உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்ககேற்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம். கலீல் முன்னாள் இரானுவ சிப்பாயான மதுசங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

16ஆவது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு

Next Post

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் 6 வயதுச் சிறுமியின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

Next Post
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் 6 வயதுச் சிறுமியின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் 6 வயதுச் சிறுமியின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures