Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விசேட ரயில் சேவைகள்

June 24, 2018
in News, Politics, World
0

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்று இலங்கை ரயில்வே சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக பொது முகாமையாளர் கலாநிதி விஜய சமரசிங்க தெரிவித்தார்.
இந்த ரயில் சேவைகள் இம்மாதம் 25ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் இடம்பெறும்.

இதே போன்று அனுராதபுரத்தில் பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வருகை தரும் பக்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் ரயில்வே திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நோன்மதி தினத்தன்று மஹாவயில் இருந்து அனுராதபுரம் வரையிலும், அனுராதபுரத்திலிருந்து மஹாவ வரையிலும் விசேட ரயில் சேவை இடம்பெறும். நோன்மதி தினத்தன்று அதிகாலை 3.30 இற்கு விசேட ரயில் ஒன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து, அனுராதபுரம் வரையில் பயணிக்கும். இந்த ரயில் காலை ஒன்பது மணிக்கு அனுராதபுர ரயில் நிலையத்தை சென்றடையும். இதேபோன்று இதே தினங்களில் கொழும்பு கோட்டையில் இருந்து கனேவத்தை வரையிலும் கனேவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட ரயில் சேவை இடம்பெறும். விசேடமாக 28ம் 29ம் திகதிகளில் மஹாவயில் இருந்த அனுராதபுரம் வரையில் விசேட ரயில் சேவை இடம்பெறும் என்றும் இலங்கை ரயில்வே சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக பொது முகாமையாளர் கலாநிதி விஜய சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

Previous Post

சிறுத்தையை கொன்ற நபர்களை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!!

Next Post

பொசன் நோன்மதி வாரம் இன்று ஆரம்பம்

Next Post

பொசன் நோன்மதி வாரம் இன்று ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures