முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கிடாப்பிடித்த குளம் பகுதியை சேர்ந்த தந்தை ஒருவர் வலிப்பினால் உடல் விறைத்த நிலையில் தனது இரண்டு அரை வயது குழந்தையை மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற வேளை அங்கு கடமையில் இருந்த தமிழ் வைத்தியர் ஒருவர் வரிசையில் நின்று வருமாறு மனிதாவிமானம் அற்ற முறையில் செயற்பட்டுள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வறுமை கோட்டின் கீழ் வாழும் தந்தை ஒருவர் வலிப்பினால் மயக்கமுற்ற நிலையில் தனது இரண்டு அரை வயது குழந்தையை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற வேளை அங்கு கடமையில் இருந்த தாதி உட்ப்பட வைத்தியரும் மற்றவர்களை போல் நீங்களும் வரிசையில் நின்று வாருங்கள் என திட்டி துரத்தியுதுடன் ”இல்லாவிடில் நீங்கள் எங்காவது போய் முறையிடலாம்” எனவும் கூறியுள்ளனர்.