Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிம் மற்றும் டிரம்ப் கையெழுத்து சொல்வது என்ன

June 13, 2018
in News, Politics, World
0

நேற்று சிங்கப்பூரில் கையெழுத்தான அமெரிக்கா – வட கொரியா ஒப்பந்தத்தில் உள்ள கையெழுத்து சொல்வது குறித்து நிபுணர்கள் கருத்து கூறி உள்ளனர்.

நமது நடை, உடை உடுக்கும் பாணி, கையெழுத்து, பேச்சு உள்ளிட்ட பலவற்றைக் கொண்டு நம்மைப் பற்றி கணிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது நம்மூரில் சாமுத்ரிகா லட்சணம் என சொல்லப்படும் அங்க இலக்கணத்தை ஒத்ததாகும். இரண்டிலும் சொல்லப்படும் குண நலன்கள் 100க்கு 100 பொருத்தம் இல்லை எனினும் இதில் நம்பிக்கை கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர். சரித்திர புகழ்பெற்ற இந்த ஒப்பந்தத்தின் விவரத்தை பலர் ஆராயும் வேளையில் கையெழுத்து நிபுணர்கள் சிலர் இந்த ஒப்பந்தத்தில் உள்ள இருவரின் கையெழுத்துக்களையும் ஆராய்ந்துள்ளனர்.

ஆராய்ச்சியில் அவர்கள், “வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இட்டுள்ள கையெழுத்தை பார்க்கும் போது அவருடைய நோக்கம் மற்றும் படைப்பாற்றல் நன்கு புலப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்தில் அவர் ஒரு பாதுகாப்பான மனிதர் என அறிய முடிகிறது.

கிம் கையெழுத்தில் அவர் நடைமுறையில் நல்லதை விரும்புகிறார் என்பதும் அவர் விரைவாக எழுதுவதால் எதையும் விரைந்து சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர் என்பதும் புரிகிறது. மேலும் அவர் பல புதிய கருத்துக்களை கொண்டவர் என்பதும் பெரிய நோக்கங்களையும் கனவுகளையும் கொண்டுள்ளார் என்பதும் புலப்படுகிறது.

ட்ரம்ப் கையெழுத்தை பார்க்கும் போது அம்பு அல்லது ராக்கெட் போல உள்ளது. இவ்வாறு கையெழுத்து இடுபவர்கள் தங்களின் உண்மை குணத்தினை வெளிக்காட்டாமல் ஒரு முகமூடியுடன் இருப்பார்கள். அந்த முகமூடிக்குப் பின் இருக்கும் உண்மையை யாராலும் அறிய முடியாது.” என தெரிவித்துள்ளனர்

Previous Post

மஸ்தானின் நிய­ம­னத்துக்கு எதிர்ப்பு- நல்­லூ­ரில் இன்று போராட்­டம்!!

Next Post

சிரியா வான் வழி தாக்குதல் : 27 பொதுமக்கள் மரணம்

Next Post

சிரியா வான் வழி தாக்குதல் : 27 பொதுமக்கள் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures