தேசிய பாதுகாப்பு நிதிய சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு நிதிய சட்டமூலம் சம்பந்தமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதேவேளை ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக (விசேட ஏற்பாடு) சட்டமூலமும், இன்ற பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால், இன்று இந்தச் சட்டமூலம், சமர்ப்பிக்கப்பட்டது.