Tuesday, September 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதை நிரூபிப்போம் டி.டி.வி.தினகரன்

June 4, 2018
in News, Politics, World
0
ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதை நிரூபிப்போம் டி.டி.வி.தினகரன்

சென்னை அசோக்நகரில் உள்ள நடேசன் சாலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) தலைமை அலுவலகம் புதிதாக அமைக் கப்பட்டுள்ளது. இதனை நேற்று நடந்த விழாவில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதையடுத்து குத்துவிளக்கு ஏற்றி, அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தின் செயல்பாடுகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் கட்சி அலுவலகத்தில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடைய படங்களுக்கு டி.டி.வி.தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தலைமை அலுவலகத்தில் கட்சி பணிகளையும் அவர்
உடனடியாக தொடங்கினார். கட்சி அலுவலகத்தின் வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா தலைமை கழகத்தை பெறுவதற்கும், அ.தி.மு.க.வை தொண்டர்களிடம் மீண்டும் சேர்ப்பதற்கும் ஆழ்வார்பேட்டை அசோக் தெருவில் அலுவலகத்தை தொடங்கினார். அ.தி.மு.க. வையும் மீட்டெடுத்தார். 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை மீட்டெடுப்பதற்காக அசோக்நகரில் நாம் அலுவலகத்தை திறந்திருக்கிறோம்.

அ.தி.மு.க.வையும், தலைமை கழகத்தையும் மீட்டெடுக்கும் வரை இந்த இடத்தில் அலுவலகம் இயங்கும். தலை நிமிர்ந்த இயக்கமாக வெற்றி நடைபோட்ட இயக்கம், இன்று தத்தி, தத்தி…மண்டியிட்டு அடிமைகளின் ராஜ்ஜியமாக திகழ்கிறது. மீண்டும் இதை தொண்டர்கள் கையில் சேர்ப்பதற்கு தியாக தலைவி சசிகலா தலைமையில் போராடிக்கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க. என்ற மக்கள் இயக்கத்தை மீட்டெடுப்பதற்கும், இரட்டை இலையை மீட்டெடுப்பதற்காகவும் நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

இரட்டை இலையை மீட்டெடுப்பதற்கும், அ.தி. மு.க.வை மீட்டெடுப்பதற்கும் முதல் கட்டமாக ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றோம். ஆர்.கே.நகரில் நிரூபித்தது போல வரும் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாம் தான் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதை நிரூபிப்போம். நிச்சயம் நாம் கோட்டையில் கொடி ஏற்றுவோம். மக்கள் விரும்பும் ஆட்சியை நாம் கொடுப்போம். அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம்.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவோம் என்று உறுதி கூறுகிறேன். அ.ம.மு.க.வுக்கு அலுவலகம் அமைக்க சென்னையில் யாருமே இடம் தராத போது, முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா இடம் கொடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா புஷ்பா எம்.பி., ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் இயக்குனர் விவேக் ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, இசக்கி சுப்பையா உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Previous Post

மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியது; 50 பேர் பலி

Next Post

டெல்லியில் கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு

Next Post
டெல்லியில் கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு

டெல்லியில் கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures