Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிர்ச்சி கொடுக்கும் எரிபொருள்களின் விலை!

May 11, 2018
in News, Politics, World
0

சிறிலங்காவில் எரிபொருள்களில் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருள்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பெற்றோல் 20 ரூபாவினாலும், டீசல் 14 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 57 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன.

நள்ளிரவு தொடக்கம், 92 ஒக்ரேன் பெற்றோல் 137 ரூபாவாகவும், 95 ஒக்ரேன் பெற்றோல் 148 ரூபாவாகவும், டீசல் 109 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 101 ரூபாவாகவும் விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளியானதை அடுத்து, சிறிலங்காவில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

அதேவேளை, இனிமேல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலை மீளாய்வு செய்யப்படும் என்று சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய பொறிமுறைக்கு அமைய எரிபொருள்களின் விலைகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும், இதன் போது விலைகள் அதிகரிக்கவும், குறைக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

‘துயிலுமில்லத்தில் நின்று அழும் உரிமையை தாருங்கள்’; கண்ணீர் மல்க கோரிக்கை

Next Post

சமுர்த்தி வங்கி விவகாரத்தையடுத்து அரசியல் களத்தில் மீண்டும் சர்ச்சை

Next Post

சமுர்த்தி வங்கி விவகாரத்தையடுத்து அரசியல் களத்தில் மீண்டும் சர்ச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures