Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்!

May 10, 2018
in News, Politics, World
0

பாம்பன் குந்துகால் பகுதியில் உருக்குலைந்த நிலையில் உயிரற்ற டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. இதன் வால் பகுதி முழுமையாக சேதமடைந்ததால் நீந்த முடியாத நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.

கடல் வாழ் உயிரினங்களின் சொர்க்கமாக திகழ்வது மன்னார் வளைகுடா கடல் பகுதியாகும். இந்த கடல் பகுதியில் 3600-க்கும் மேற்பட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் உயிர் வாழ்ந்து வருகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு மன்னார் வளைகுடா கடல் பகுதியை உயிர் கோள காப்பகமாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல் பூங்கா பகுதியில் வாழும் கடல் வாழ் உயிரினங்களுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி அவ்வப்போது அரிய வகை டால்பின்கள் உயிரிழந்து கரை ஒதுங்கி வருகின்றன.

பாம்பன் குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பின் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் இன்று காலை சுமார் 2 மீட்டர் நீளம் கொண்ட டால்பின் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. இதன் வால் பகுதி முழுமையாக சேதமடைந்ததால் இது ஆணா, பெண்ணா என அறிய முடியாத நிலையில் காணப்பட்டது. கப்பல் அல்லது பாறையில் மோதியதால் நீந்த முடியாத நிலையில் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. தகவல் அறிந்த வன உயிரின பாதுகாப்பு அலுவலர் சதீஷ் உள்ளிட்டோர் குந்துகால் பகுதிக்கு வந்து கரை ஒதுங்கிய டால்பினை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் கடற்கரை மணலில் புதைத்தனர்

Previous Post

மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டமைப்பான நம்பிக்கை கூட்டணி வெற்றி

Next Post

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல்

Next Post

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures