நாடாளுமன்ற ஆசன முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது என்று நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசிலிருந்து வெளியேறிய 16 முன்னாள் அமைச்சர்கள்? நாடாளுமன்ற எதிர்க்கட்சி தரப்பில் அமர தமக்கு ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதற்கமைய ஆசன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறித்த 16 பேரில் மூத்த உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.