Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா நூற்றுக்கணக்கான அம்மன் பக்தர்கள் கலந்துகொண்ட சிறப்பான விழாவாக கொண்டாடப்பட்டது.

April 23, 2016
in News, World
0

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா நூற்றுக்கணக்கான அம்மன் பக்தர்கள் கலந்துகொண்ட சிறப்பான விழாவாக கொண்டாடப்பட்டது. காலநிலை மிகவும் சாதகமாக இருந்ததினால் வழமைக்கு மாறாக பக்தர்கள் அலை அலையாக திரள ஆரம்பித்தனர். பல குருக்கள் அந்தண பெருந்தகைகள் கலந்துகொண்ட விழா என கூறுவதில் பெருமிதம்கொள்கின்றேன். இந்த ஆலயமானது ஒரு கட்டுக்கோப்பான நிர்வாக அமைப்பின் கீழ் இயங்கிவருவதனை நாம் அறிவோம். விழாக்களின் சிறப்பு மற்றும் வல்வை முத்துமாரியம்மனின் சாயலை ஒத்ததாக விழாக்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்படுவது வருடாந்த உற்சவத்தின் சிறப்பம்சமாகும். அந்தவகையில் நேற்றைய தினம் சப்பறத் திருவிழாவும் அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தேர்த் திருவிழாவும் இனிதே நடந்தேறியது. கூடுதலான பெண் பக்தர்களின் அம்மனின் அருளினை பெறும் பொருட்டு பல்வேறுவிதமான நேர்த்திக்கடன்களை அம்மனின் பாதத்தில் சமர்பித்ததனை காணக்கூடியதாக இருந்தது. வசந்த மண்டப பூஜைகள் சரியாக 11 மணிக்கு ஆரம்பமாகியது. மூறு மூர்த்திகள் வசந்த மண்டப பீடத்தில் அமர்ந்திருக்க பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. தீப ஆராதனைகள் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பத்திற்கும் மேற்பட்ட நாதஸ்வர தவில் கலைஞர்கள் மிகவும் சிறப்பாக பல்வேறுவிதமான தெய்வீக பாடல்கள் கலந்த இசை அமுதத்தினை வழங்கினார்கள். வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து ஆலயத்தின் வளர்ச்சியினை பாராட்டி கனடா இந்து சங்கத்தின் சார்பாக ஒரு வாழ்த்துமடல் நிர்வாக தலைவர் திரு ரவிசங்கர் கனகராஜா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல சிறந்த ஆலய முகாமையாளராக கடமைபுரியும் திரு ராஜேஸ்வரன் வைத்தியநாதனுக்கு அவர்களின் சேவையினை பாராட்டி ஒரு வாழ்த்துமடல் வழங்கப்பட்டது. உள்வீதிவலம் வருகின்ற காட்சி பக்தர்களின் கண்களுக்கு இறைபக்தி கலந்த உணர்வினை உருவாக்கி பல பெண் பக்தர்கள் இறைபக்தியின் அதீத உணர்வலைகளினால் தாக்கப்பட்டு அம்பாளின் பாடல்களை உச்சரித்தபடி தங்களை மெய் மறந்து அரோகரா என முழக்கமிட்டவாறு ஆடியதை கவனிக்க முடிந்தது. ஏராளமான ஆன் பக்தர்கள் அங்க பிரதீஷ்டை செய்ததை அவதானிக்க முடிந்தது. மூல மூர்த்திகள் வீதிஉலா வந்ததும் சிறப்பான நாதஸ்வர தவில் கச்சேரிகள் நடைபெற்றன. வெளிவீதியில் இரண்டு அழகிய சித்திரத்தேரில் மூலமூர்திகள் அமர்த்தப்பட்டு வெளிவீதி உலாவரும் காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது. மொன்றியால் நகரில் இருந்து கூட ஏராளமான அம்மன் பக்தர்கள் வந்திருந்தார்கள். பல தொண்டர்கள் காலநிலையின் நிமித்தம் தாக சாந்தி செய்ததினை அவதானிக்க முடிந்தது. சிறுவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது பெரியவர்களுடன் சேர்ந்து வடம் இழுத்ததினை அவதானிக்க முடிந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை அம்ம்பாளிடம் செலுத்துவதற்காக கற்பூரசட்டி ஏந்தி தங்களது காநிக்கையினை செலுத்தினார்கள். பல பெண் பக்தர்கள் பால்குடம் ஏந்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள். விழாவின் இறுதியில் தாராள அன்னதானம் வழங்கப்பட்டது. வீதி எங்கும் பந்தல்கள் அமைத்து மண்டகப்படி உருவாக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Langes, FCPA, FCGA
easynews latestnews
easy24news.com
Canada Hindu Temple Association

Previous Post

திருகோணமலை தமிழர்களின் தமிழ்த் தாயகம். அங்கிருந்து அசைந்துவரும் அழகிய சித்திரத் தேர் . தமிழர்களின் கலை மற்றும் அடையாளம் என்றும் அழியாது.

Next Post

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா நூற்றுக்கணக்கான அம்மன் பக்தர்கள் கலந்துகொண்ட சிறப்பான விழாவாக கொண்டாடப்பட்டது.

Next Post

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா நூற்றுக்கணக்கான அம்மன் பக்தர்கள் கலந்துகொண்ட சிறப்பான விழாவாக கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures